மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வணக்கம்.
2024-2025 பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள், ஒன்றிய அரசின் தலைமை நிதி ஆலோசகர் திரு. ஆனந்தம் நாகேஸ்வரன் தயாரித்து நீங்கள் வெளி யிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 291 இடங்க ளில் ‘வேலை’ அல்லது ‘வேலையின்மை’ என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.
இதன்மூலம் வேலையின்மை மீதான உங்களு டைய கவலையை இப்படி வெளிப்படுத்தி இருப்ப தாக சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆனால், உங்களுக்கு இப்போது இருக்கிற கவலை, நாடாளுமன்ற தேர்தலின் போது, எங்காவது பிரதி பலித்ததா? வேலையை உருவாக்க வேண்டும் அல்லது உருவாக்குவோம் என்ற எந்த விஷயமும் அப்போது இல்லாமல் போனதேன்?
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நரேந்திர மோடி அவர்கள், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை’ என்பதை இந்திய மக்களுக்கு வாக்குறுதியாக அளித்தார்.
ஆனால் கடந்த 10 வருடமாக அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட, ஒரு இடத்தில் கூட பேசியதே கிடை யாது. நாடாளுமன்றத்திலோ 2019 தேர்தல் அறிக்கை யிலோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்க ளிலோ அவர் சொல்லவே இல்லை. ஆனால் திடீரென்று வேலையின்மை அல்லது வேலைவாய்ப்பு ஒரு பெரிய விஷ யமாக பொருளாதார ஆய்வறிக்கையில் பேசப்படுகிறது.
யார் சொல்வது உண்மை?
இப்படி நீங்கள் அதிக தடவை பேசி விட்டதா லேயே நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்று நம்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலைமை தான் இருக்கிறது. உதாரணமாக நாடாளுமன்றம் கூடு வதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி திடீரென்று வேலைவாய்ப்பு பற்றி மதிப்பீடு என்ற ஒன்றை வெளியிட்டது.
அதில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டு மொத்தமாக 64.3 கோடி பேர் வேலையில் இருப்ப தாக பறைசாற்றப்பட்டு இருக்கிறது. 2018-க்கும் 2024-க்கும் இடையே மட்டும், அதாவது ஆறு ஆண்டு களில் 16.8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டதாக சொல்லி இருக்கிறது. அதன் பொருள் என்ன வென்றால் ஆண்டுக்கு 2.8 கோடி பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்ததாக அர்த்தம். எந்த விதமான முயற்சியும் இல்லாமல் அல்லது நீங்கள் எடுக்கா மல் அல்லது நீங்கள் ஏற்கெனவே எடுத்த முயற்சி யின் காரணமாக ஆண்டுக்கு 2.8 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கும் போது, இப்போது வரு டத்திற்கு 80 லட்சம் வேலைக்கு எதற்காக மெனக்கெட வேண்டும் என யாரும் கருத மாட்டார்களா?
இது ஒரு புறம் இருக்க, 2014-2023 வரையிலான காலத்தில் 12.5 கோடி பேருக்கு வேலை கொடுத்த தாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஒன்பது ஆண்டு களில் 12.5 கோடி வேலைவாய்ப்பு என்று நீங்கள் குறிப் பிட்டிருக்கிறீர்கள். ஆனால் 6 ஆண்டுகளில் 16.8 கோடி பேருக்கு வேலை என ரிசர்வ் வாங்கி சொல்கிறது. இதில் யார் சொல்வது உண்மை? நரேந்திர மோடி தலை மையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, ஒரு உண்மையைக் கூட சொல்வது இல்லை. தரவுகளை முழுமையாக தருவதில்லை. ஆய்வுகளை மேற்கொள்வது இல்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
2018இல் அறிவித்த திறன் இந்தியா என்னாயிற்று?
இன்னொரு பக்கம் நீங்கள் இந்த ஆண்டு அறிவித்திருப்பது முழுக்க முழுக்க ஏதோ திறமை யின்மை காரணமாகத்தான் வேலைவாய்ப்பே இல்லை. ‘திறன் மேம்பாடு’ (Skill development) இருந்தால் வேலை வாய்ப்பு வந்து விடும் என்கிற முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், 2018-ஆம் ஆண்டு உங்கள் அரசாங்கம் அறிவித்த ‘திறன் இந்தியா’ வளர்ச்சி (Skill India) என்ன ஆனது?
திறன் மேம்பாடு என்பதற்காகவே புதிதாக ஒரு அமைச்சரையும், அமைச்சகத்தையும் உருவாக்கி னீர்கள். அது என்னாயிற்று? எனவே ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கும் 16.8 கோடி வேலை வாய்ப்புகளா கட்டும், 12.5 கோடி என்று நீங்கள் சொல்லி இருக்கிற கணக்காகட்டும், இது எதிலும் உண்மையும் நேர்மையும் இல்லை.
இந்த ஆண்டு நீங்கள் சொல்லி இருக்கிற கணக்குப் படி, ஒரு கோடிப் பேருக்கு 5 வருடங்கள் என்றால், ஒரு வருடத்திற்கு 20 லட்சம் பேர், ஒரு வருடத்திற்கு 20 லட்சம் பேர் என்றால் 500 நிறுவனங்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவனம் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கவேண்டும். அவ்வாறு 4000 பேருக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் எத்தனை உள்ளன? குறைந்தபட்சம் தமிழகத்தில் அப்படி ஒரு நிறுவனம் கூட இருப்ப தாக தெரியவில்லை.
அப்பட்டமான ஏமாற்று வேலை
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதற்குப் பதிலாக, வேலைக்கு சேர்ந்து விட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 15,000 ரூபாயை 3 தவணைகளில் தருவோம் என்பது என்று சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை இல்லையா? இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பை முதலாளி களிடம் கொடுத்து விடுகிறீர்கள்.
இதற்கு முன்னதாகவும் திரு. பியூஸ் கோயல் இதேபோல் விஷயத்தை சொல்லி இருக்கிறார். இந்தி யாவில் இருக்கக்கூடிய முதல் 200 நிறுவனங்களில் இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்றார். அப்போது ஏர்செல் நிறுவனத்தின் முதலாளி சுனில் மிட்டல் ஒரு கேள்வியை கேட்டார். இந்த 200 நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளில் நிகர வேலைவாய்ப்பு என்ன அதிகரித்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பி, ‘எதுவுமே இல்லை’ என்று கூறினார். அப் போது உங்களுடைய பதில் என்னவாக இருந்தது? ‘இப் போது இருக்கக்கூடிய இளைஞர்கள் எல்லாம் வேலை தேடுபவர்களாக இல்லை. மாறாக வேலை அளிப்பவர்க ளாக இருக்கிறார்கள்’ என்பதாக இருந்தது.
உடனடியாக அதற்கு பலரும் பதில் சொல்லி விட்டார்கள். நீங்கள் ‘ஸ்டார்ட் அப்’ பற்றி தான் பேசு கிறீர்கள். ஆனால், ‘ஸ்டார்ட் அப்’பில் 95 சதவீதமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டனவே என்ற விஷயத்தை சுட்டிக்காட்டினார்கள். அதற்கு பின்னர் எந்த பதிலும் வரவில்லை.
4000 பேருக்கு எந்த முதலாளி பயிற்சி வழங்குவார்?
இவை ஒருபுறமிருக்கட்டும். ஒரு முதலாளி தனக்குத் தேவையான வேலைக்கு மட்டும் தான் ஆட்களை உருவாக்குவார் அல்லது பயிற்றுவிப்பார். முதலாளிகளைப் பொறுத்தவரை வேலையில்லாப் பட்டாளம் வெளியே இருக்கும் போது தன்னிடம் இருக்கும் வேலையாட்களுக்கு குறைந்த கூலியை கொடுக்கலாம் என்ற எண்ணம் தான் இருக்கும். அப்படி இருக்கும் போது எல்லோருக்கும் வேலை கொடுப்பதற்கான ஒரு பயிற்சியை ஒரு நிறுவனம் எப்படி வழங்கும்?
அடிப்படையில் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இல்லை. இரண்டாவதாக எந்த வொரு முதலாளியும் நல்ல நோக்கத்தோடு இதையெல் லாம் செய்ய மாட்டார் என்கிற விஷயமும் இருக்கிறது.
அரசு நிதியை அள்ளி முதலாளிகளுக்கு கொடுக்க ஒரு திட்டம்
எனவே, நீங்கள் இரண்டாவதாக இந்த பட்ஜெட்டில் சொல்லி இருக்கக்கூடிய ஆலோசனைகள் என்பது அடிப்படையில், கார்ப்பரேட் நிறுனங்கள், தங்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) ஒரு பகு தியை அந்த நிர்வாகங்களை எடுத்துக் கொள்வ தற்கும், வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற பெய ரில் 72 ஆயிரம் கோடி ரூபாயை, அரசாங்கம் பெரு முதலாளிகளுக்கு இலவசமாக அள்ளிக்கொடுக்கும் ஏற்பாடு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) அமைப்பானது, நாட்டில் வேலையின்மை 9.3 சதவிகிதமாக இருக்கிறது என கூறி இருக்கிறது. அதை மறுப்பதற்கு பாஜக-விடம் வார்த்தைகள் இருக்கிறதே தவிர எந்த இடத்திலும் தரவுகளை முன் வைத்து பேசக்கூடிய தைரியம் இல்லை. தரவு களுடன் அதை மறுக்கவில்லை.
பொருளாதார ஆய்வறிக்கையின் பக்கம் 275-இல் நீங்கள் சொல்லி இருப்பது 2017-2018ஆம் ஆண்டு வேலை செய்தவர்களில் 52.5 சதவிகிதம் பேர் சுய தொழில் செய்பவர்கள் என்றும், தற்போது 2022-2023-இல் அது 57.3 சதவிகிதமாக அதிகரித்துள் ளது என்றும் தெரிவித்துள்ளீர்கள்.
மாத சம்பள தொழிலாளர் எண்ணிக்கை குறைவு
இந்த ஆண்டுகளுக்கு இடையே ஒட்டுமொத்த தொழிலாளர்களில் சுயவேலைப் பிரிவினர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது மட்டுமல்லாது, தொடர்ச்சியாக மாதாந்திர சம்பளம் வாங்கும் தொழி லாளர்கள் எண்ணிக்கை- 22.8 சதவிகிதம் என்றிருந்தது 20.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 3.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் எங்கிருந்து நீங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கினீர்கள் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள்?
இன்னொரு பக்கத்தைச் சொல்வது என்றால்- இந்த வேலைகளும் கூட நீங்கள் சொல்கிற கணக்கை எடுத்துக் கொள்வது அல்லது நேரடியாக பொருளா தார ஆய்வறிக்கை சொல்வதிலிருந்து எடுத்துக் கொள்வது என்றால்- 18.3 சதவிகிதம் பேர் வீட்டு வேலையில் ஈடுபடுகிறவர்கள். அதாவது அவர்க ளுக்கு சம்பளம் எதுவும் வராது என்பதுதான். இதில் 45 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கின்ற னர்.
45 சதவிகிதம் விவசாயம் என்பதன் பொருள் என்ன?
அதற்கு நீங்கள் நேரடியாக நீங்கள் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்றி னோம். அதன் காரணமாக வந்தது என்று கூட சொல்ல லாம். அப்படியானால் அந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா, இந்த ஆண்டு என்ன செய்திருக்கிறீர்கள்?
இருக்கிற வேலையை குறைக்கப் போகிறீர்கள்!
அதை குறைப்பதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறீர்கள். உண்மையில் போன ஆண்டுக்கு முந்தைய ஆண்டு 98,000 கோடி ரூபாய் ஒதுக்கி னீர்கள். போன ஆண்டு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தீர்கள். ஆனால் உண்மையான செலவு 86,000 கோடி ரூபாய். இந்த வருடமோ 86,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடைய பொருள் பண வீக்கத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வில்லை. 6 அல்லது 7 சதவிகித பணவீக்கம் என்று வைத்துக் கொண்டால், அந்த அளவுக்காவது நிதியை உயர்த்தி வழங்கி இருக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் அதைவிட அதிக பணவீக்க நிலைமை தான் இருக்கிறது. எனவே கிராமப்புற வேலை வாய்ப்பை ஏற்கெனவே இருந்ததில் இருந்து, குறைக்கப் போகிறீர்கள் என்று பொருள்.
ஒட்டு மொத்தமாக வேலை வாய்ப்பு குறித்து தங்க ளுடைய தம்பட்டம் என்பது வெறும் வாய்ச்சொல். இதில் கூட ஒரு புதிய பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கலாம் என நினைக்கலாம். அப்போது கூட முடிவு நேர்மறையாக வருமா, இல்லையா என்பது கூட பலருக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லி இருக்குற இந்த திட்டம் அடிப்படையிலேயே சாத்தியமற்றது என்று தெரியும்.
வேலை வாய்ப்பு பெருகவில்லை நிறுவனங்களுக்கே நிதி கிடைத்தது
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் ‘உற்பத்தித் திறனோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ (Productivity linked incentive) என்ற ஒன்றைச் சொன்னீர்கள். அப்படி சொல்லும் போது இது தொழில் துவங்குவதற்கு கூடுதலான வாய்ப்பை ஏற்படுத்தும்; அதனால் வேலைவாய்ப்பும் பெருகும் என்றீர்கள்.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், உற்பத்தித் திறனோடு இணைக்கப்பட்ட ஊக்கத் தொகையை வாங்கிக் கொண்டார்களே தவிர, அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருகியதா என்று கேட்டால் பெருகவில்லை என்பது தான் நிதர்சன மான உண்மை.
இந்தியாவில் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வேண்டுமென்றால் நுகர்வை அதிகப் படுத்த வேண்டும். இந்தியர்கள் 140 கோடி பேரும், ஒரு செட் டிரஸ் கூடுதலாக அணிய வசதியிருந்தால், ஒரு நபருக்கு ஐந்து மீட்டர் துணி வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 700 கோடி மீட்டர் துணி அதிகமாக வேண்டி இருக்கும்.
அப்படியென்றால் அதற்குத் தேவையான பருத்தி நடவு, அதற்கான வேலை, அல்லது ரேயன் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஏற்பாடு, பஞ்சு மற்றும் அதனை நூலாக மாற்றுவது, டெக்ஸ்டைல் மில்லுக்கு அனுப்புவது, சாயமேற்று வது, வெட்டுவது, தைப்பது, ஏற்றுமதி செய்வது அல்லது வியாபாரத்துக்கு கொண்டு செல்வது என்று ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இப்படித்தான் நுகர்வை அதிகப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
தகுதியுள்ள நபர் இருந்தால் தானாய் வருமா தொழிற்சாலை?
ஆனால், மிக மிக புளித்துப் போன, ‘வழங்கலே அதன் சொந்த தேவையை உருவாக்கும்’ (Supply will creats its own demand) என்கிற முதலா ளித்துவ சிந்தனையாளர்களின் சூத்திரம் எதுவும் இங்கே பலிக்கப் போவது இல்லை. ஏனென்றால் தகுதியுள்ள நபர்களை எல்லாம் உருவாக்கி விட்டதனாலேயே ஒரு தொழிற்சாலை வரும் என்று எந்த ஊரிலாவது நாம் பார்த்திருக்கிறோமா? அப்படி இதுவரை எங்காவது நடந்திருக்கிறதா? எனவே இது அடிப்படையில் நேர்மையற்றது.
பாஜக அரசு வேலைவாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்தால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் ஒன்றிய அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களைத் தான் நிரப்பியிருக்க வேண்டும்.
ரயில்வேயில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் காலி யாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல ஒன்றியப் பொதுத்துறை நிறுவனங்களில் 9 லட்சத்துக் கும் அதிகமான காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
வினோத வழி
உட்கட்டமைப்பிற்கு கூடுதலாக பணம் ஒதுக்கி னால் ஏதோ கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாகி விடும் என நெடுநாட்களாக சொல்லி வருகிறீர்கள். நிதி யும் ஒதுக்கி வருகிறீர்கள். ஆனால் உள்கட்டமைப்பு க்கு நிதி ஒதுக்கியதன் காரணமாக இவ்வளவு அதிக மான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என உங்களால் எப்போதாவது ஆதாரப்பூர்வமாக தரவு களுடன் சொல்ல முடிந்துள்ளதா?
எனவே, மக்களின் வரிப்பணத்தை, முதலாளிக ளுக்கு மாற்றி விடுவதற்காக நீங்கள் கண்டிபிடித்துள்ள வினோதமான வழிதான் வேலை வாய்ப்பு குறித்த உங்களின் தம்பட்டங்கள்.
-க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)